ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில், நகராட்சி சட்டத் திருத்தம் 2019-இன் படி,75 கஜத்திற்குள் வீடு கட்டுபவர்கள், 1 ரூபாய் கட்டணத்தில் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். அந்தவீட்டுக்கு மேல் மற்றொருவீடு கட்டும் பட்சத்தில்மட்டும், அதற்கு ஏற்கெனவே உள்ள கட்டணத்தை செலத்தியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித் துள்ளார். அண்மையில் சமூக நல திட்டத்தின் கீழான ஓய்வூதிய தொகையை சந்திரசேகர ராவ் இரண்டு மடங்கு உயர்த்தி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.