tamilnadu

img

தெலுங்கானா: மண் சரிந்து 10 பேர் பலி

தெலுங்கானாவில் மண் சரிந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தெலுங்கானா மாநிலம் நாராயண பேட்டை மாவட்டத்தில் உள்ள மரிக்கல் மண்டபம் திலேர் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மண் எடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொக்லைனில் மண் எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


;