tamilnadu

img

தெலுங்கானாவில் 460 கிராமங்கள்,2 நகரங்கள் காணவில்லை!

தெலுங்கானவில் 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு குறிப்பேட்டில் இருந்து காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 2021 ம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆந்திரா - தெலுங்கானா பிரிக்கப்படுவதற்கு முன்பு, தெலுங்கானா பகுதியில் இருந்த 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு குறிப்பேட்டில் இருந்து காணாமல் போனது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் 460 கிராமங்களும், 2016 அக்டோபரில் தெலுங்கானா அரசு பொறுப்பேற்று மாவட்டங்கள் பிரிக்கும் போது பிரிக்கப்பட்ட 14 புதிய மாவட்டங்களின் கீழ் வருகின்றன. 2011 மக்கள்தொகை புள்ளிவிபரத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், தெலுங்கானாவில் இருந்து இப்பகுதிகள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   மாயமான கிராமங்களில் 36 கிராமங்களின் பெயர்கள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு பட்டியலிலும் இடம்பெறவே இல்லை என்பது அதிகாரிகளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 இத்தனை கிராமங்கள் மாயமாகி இருப்பதும், பதிவேட்டில் இருந்து விடுபட்டது குறித்தும் தெலுங்கானா அரசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
 

;