tamilnadu

img

குற்றால அருவிகளில் குளிக்க 3 நாள் தடை

ஆங்கில புத்தாண்டை ஒட்டி 3 நாட்களுக்கு குற்றாலம் உள்ளிட்ட 9 அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தென்காசி மாவட்டம் குற்றாலம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் எட்டு மாதங்களாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் சமீபத்தில் கடந்த 20 ஆம் தேதி மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.  

இந்தநிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி வருவதால், புத்தாண்டு விடுமுறை தினத்தில் 3 நாட்களுக்கு குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர்.கோபாலசுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, பாலருவி, சிற்றுருவி என மொத்தம் உள்ள ஒன்பது அருவிகளிலும் வரும் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்,