ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி செங்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. வாலிபர் சங்க தாலுகா செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பால்ராஜ், தாலுகா பொருளாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.