tamilnadu

ஆலங்குளத்தில் 9 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜூன் 7- கொரோனா பாதிப்பு  நிவாரணம் வழங்க  கோரி இடதுசாரி கட்சிகள்  சார்பில் 9ம்தேதி   ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதை யொட்டி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்ட தயாரிப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  நடை பெற்றது. அ.மகாவிஷ்ணு தலைமை  தாங்கினார்.  கூட்டத்தில்   மறைந்த தோழர் மீராசாவுக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது  கூட்டத்தில் செவ்வா யன்று  9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டது.  அதன்படி மருதம்புத்தூர் -  அ.மகாவிஷ்ணு,கண்டபட்டி -பரமசிவன், புதுபட்டி- லிங்கராஜ் , ஆலங்குளம் -பாலு,  குரு வன்கோட்டை- அ.வெற்றிவேல்,    கடங்க னேரி-  ராமசாமி, கீழக்கலங்கல்-சக்திவேல், வீரகேரளம்புதூர்- ப.மாரியப்பன், பெத்தநாடார் பட்டி- கனகராஜ் தலைமையில்  ஆர்ப்பாட்டம்  நடைபெறும்.   மேலும் இந்தியா முழுவதும் சிபிஎம் சார்பாக   16-ம் தேதி   அன்று  நடை பெற  இருக்கிற  ஆர்ப்பாட்டத்தையொட்டி  ஆலங்குளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  போராட்டத்தை நடத்திட கூட்டத்தில்  முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.