tamilnadu

தூத்துக்குடியில்  பைக் மோதி பெண் பலி

 தூத்துக்குடி,ஜூலை 18- தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்ற பெண், பைக் மோதி உயிரிழந்தார். பைக்கை ஓட்டிவந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி முள்ளக்காடு எம். சவேரி யார்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராஜம்மாள் (46). இவர் அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு தூத்துக்குடி - திருச் செந்தூர் பிரதான சாலையை கடக்க முயன்றுள் ளார். அப்போது இளைஞர் ஒருவர் வேகமாக ஓட்டிவந்த பைக் ராஜம்மாள் மீது மோதியது. மேலும், மோதிய வேகத்தில் பைக்கும் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்தக் காயமடைந்த ராஜம் மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பைக்கை ஓட்டி வந்த திரேஸ்புரம் அண்ணா காலனியைச் சேர்ந்த ஜான் மகன் ஜாய்சன் (22) என்பவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல்துறையினர்  ஜாய்சன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.