tamilnadu

img

60 லட்சம் காலிப் பணியிடங்கள்!

அகில இந்திய மாநில அரசு  ஊழியர்  சம்மேளன தேசிய செயற்குழு கூட்டம் வலியுறுத்தல்

தூத்துக்குடி,ஜூலை 10- அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தோழர்.எம்.ஆர்.அப்பன் இல்லம், தோழர்.டி.கே.சுந்தர பாண்டியன் அரங்கத்தில் ஜூலை 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மேள னத்தின் தலைவர் சுபாஸ்லம்பா தலைமை வகித்தார். 27 மாநி லங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  முதல் நாள் நிகழ்ச்சியாக சம்மேள னத்தின் கொடியினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலை வர் மு.அன்பரசு ஏற்றிவைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடியினை பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஏற்றி வைத்தார்.  அரசு ஊழியர் சங்கத்தின் துணைப்பொதுசெயலாளர் .என்.வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றி னார். சிஐடியு தேசியசெயலாளர் ஆர்.கருமலையான் துவக்கிவைத்து உரையாற்றினார்.  சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் நிரைவுரையாற்றினார்.  தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சி.எஸ்.கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர்  ஏ.ஸ்ரீகுமார் “தோழர்.கே.ஆர்.சங்கரன் அரங்கம்” இலவச பயிற்சி மையத்திற்கான அடிக்கலை நாட்டினார்.  முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து  செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கை  மிகவும் ஆபத்தா னது. அதனை ரத்து செய்ய வேண்டும்.  ஒன்றிய, மாநில அரசுகளில் உள்ள 60 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் . அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் தொகுப்பு ஊதியம், சிறப்பு காலமுறை ஊதி யத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்ததார். ஆனால் அரசு, ஆசிரியர்களை தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்வதை வன்மையாக கண்டிக் கின்றோம். தேர்தல் நேரத்தில் அதிமுக செய்ய தவறிய வாக்குறுதி கள் அனைத்தையும் திமுக ஆட்சி யில் நிறைவேற்றப்படும் என்ற  வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.  எனவே ஆக்ஸ்ட் 23 அன்று தமிழக முதல்வரின்  கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.