தூத்துக்குடி, மே 27- கோயம்புத்தூர் வடவள்ளி கிராமம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வேலாயுதம் (43). இவர் செவ்வா யன்று திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியை ஓட்டிவந்தார். புதுக்கோட்டை மங்கலகிரி விலக்கு அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி இவரது லாரி மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த வேலாயுதம் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் வழக்குப் பதிந்து விசார ணை நடத்தி வருகிறார். தப்பியோடிய மற்றொரு லாரியின் ஓட்டு நரை போலீசார் தேடி வருகின்றனர்.