tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 10-ம் கட்ட விசாரணை

தூத்துக்குடி, ஏப்.8 -

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை திங்களன்று தொடங்கியது. ஏற்கெனவே 9 கட்ட விசாரணை நடந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை திங்களன்று தொடங்கியது. விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன்தலைமையில் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமைந் துள்ள முகாம் அலுவல கத்தில் இந்த விசாரணை நடந்தது.இந்த விசாரணைக்காக 47 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திங்களன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தவர்கள் விசார ணை ஆணையத்தில் ஆஜ ராயினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

;