tamilnadu

img

தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைப்பு: மாநகராட்சி நடவடிக்கை!

தூத்துக்குடி,ஆக.22- தூத்துக்குடியில் விதி களை மீறி கட்டிடம் கட்டப் பட்டதாக பிரபல சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தூத்துக்குடி விஇ ரோட்டில் 5 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஜவுளி, நகை விற்பனை, சூப்பர் மார்க்கெட் உள் ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த கட்டிடம் விதிகளை மீறி அனுமதிபெற்ற அளவை விட அதிகமான அளவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் சென்னை சில்க்ஸ் நிர்வாகத்தினர் உரிய விளக்கம் அளிக்க வில்லை என்று கூறப்படு கிறது. இந்நிலையில், மாநக ராட்சி உதவி ஆணையர் தனசிங், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி பிரின்ஸ், மாநக ராட்சி அலுவலர் பாலு, மற்றும் உள்ளூர் திட்ட அதிகா ரிகள், காவல் துறையினர் வெள்ளியன்று காலை சென்னை சில்க்ஸ் கட்டிடத் திற்கு சீல் வைத்தனர். மேலும், குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பிரபல ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

;