tamilnadu

தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி முக்கிய செய்திகள்

மாவடுகுறிச்சி தொ.வே.கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கல்
தஞ்சாவூர், அக்.23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள டி-1026 மாவடுகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அன்று நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கித் தலைவர் கே.வெங்க டேசன் தலைமை வகித்தார். கூட்டுறவு நிலவள வங்கித் தலை வரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான உ.துரை மாணிக்கம் கலந்து கொண்டு, இழப்பீட்டு தொகை வழங்கி பேசினார். இதில் 2018-19 ஆம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக 44 விவசாயிகளுக்கு ரூபாய் 9 லட்சத்து 64 ஆயிரத்து 696 வழங்கப்பட்டது.  இதில் கூட்டுறவு சங்க இயக்குநர்கள், உறுப்பினர்கள், கிராமப் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக செயலாளர் மு.பழனிவேலு நன்றி கூறி னார்.

பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்
தஞ்சாவூர், அக்.23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு சார்பில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை அன்று நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சி.கஜானா தேவி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர் எஸ்.ஜெயந்தி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் பால் ஏ.பக்கர், கல்விப் புரவலர் கோ.ப. ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவப் பிரிவு டாக்டர் செந்தில் குமார் கலந்து கொண்டு விழிப்பு ணர்வு உரையாற்றினார்.  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.கோவிந்தராசு, மாணவி களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிப் பேசினார். 800 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதல்கட்டமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  தொடர்ந்து வளரிளம் பருவ பெண்களுக்கான, “எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு” கருத்தரங்கம் நடைபெற்றது. அரசு மருத்துவமனை ஆலோசகர் முத்துலெட்சுமி கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்வில், கொன்றை கணேசன், மருந்தாளுநர் பன்னீர்செல்வம், உதவியாளர் தமயந்தி, ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

இளம் பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளி கைது கோரி ஆர்ப்பாட்டம்
அரியலூர், அக்.23- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அந்த பெண்ணின் பெரியப் பாவே பலாத்காரம் செய்து ஆறுமாத கர்ப்பிணி ஆக்கி விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டான். அவனை கைது செய்து நட வடிக்கை எடுக்க கோரி ஆண்டிமடத்தில் அகில இந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதனன்று நடைபெற்றது. மறியலாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் பொழுது காவல்துறை யினர், ஆளுங்கட்சியினர் குற்றவாளிக்கு ஆதரவாக பேசிய தனால் ஆர்ப்பாட்டம் சாலை மறியலாக மாறியது. 500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சூழ்ந்தனர். ஆண்டி மடம் நகரமே போர்களம் போல் காட்சியளித்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பத்மாவதி தலைமை தாங்கினார். வளர்மதி, மணிமேகலை, கௌசல்யா, சித்ரா, கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாதர் சங்க மாநில துணை செயலாளர் கீதா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிற்சங்கத்தி னரும் கலந்து கொண்டனர்.

சாலைகளை சரிசெய்ய கோரி வாழைக்கன்று நடும் போராட்டம் 
தூத்துக்குடி, அக்.23- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளும் குண்டும் குழியுமாக மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. இதனை சரி செய்யகோரி திருச்செந்தூர் தேரடி அருகில் புதனன்று சிபிஎம் சார்பில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முத்துக் குமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் பன்னீர்செல்வம்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெய பாண்டியன்,சந்திர சேகர்,பொன் கல்யாணசுந்தரம்,எஸ்.சிவ தானு தாஸ்,அன்பழகன்,முருகேஷ்,முருகேசன் ஜெபஸ்டின் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.