tamilnadu

சிறப்பு எஸ்ஐ  பால்துரையின் மனைவி புகார்

  தூத்துக்குடி, ஆக.10- சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான் குளம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய் வாளர் பால்துரை திங்களன்று அதி காலை 2.30 மணியளவில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், கணவரின் மரணம் குறித்த தகவல் அறிந்து பால்துரையின் மனைவி மங்கையர் திலகம் கூறியதா வது: எனது கணவருக்கும் கொலை வழக் கிற்கும் சம்பந்தம் இல்லை என கூறி னால் மட்டுமே உடலை பெறுவோம் என வும், தனது கணவரின் உயிரிழப்பிற்கு கார ணமான சாத்தான்குளம் காவல்நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவி யர் மற்றும் தத்தார்மடை காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஸ் ஆகியோர் தான் என வும், என் கணவர் கடைசியாக உயிரிழக் கும் முன் எப்படியாவது தண்டனை வாங்கி கொடுங்கள் என கூறி விட்டு இறந்ததாக தெரிவித்துள்ளார்.

;