tamilnadu

img

பாலியல் வன்முறையை தடுக்க கோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 1-  கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 வழங்க கோரியும் பாலியல் வன்முறை களை தடுக்கக்கோரியும் மளிகை பொருட்களை ரேசன் கடை மூலமாக மூன்று மாதத்திற்கு இலவசமாக வழங்க கோரியும் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திங்களன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 40இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.பூமயில் ,தலைவர் ஆர்.விஜயலெட்சுமி, பொருளாளர் எஸ்.ராமலெட்சுமி, துணைத் தலைவர் த.கலைச்செல்வி, துணை செயலாளர் எம்.கமலா, மாவட்டக்குழு உறுப்பினர் புஷ்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;