தூத்துக்குடி, ஜூன் 1- தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தூத்துக் குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அணி எண்.54 மற்றும் 56ன் சார் பாக ரூ.1000 மதிப்புள்ள அரிசி, காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய பை கள் வழங்கப்பட்டன. காமராஜ் கல்லூரி முதல்வர் நாக ராஜன், தாளமுத்துநகர் காவல் ஆய்வா ளர் பிரேமா ஸ்டாலின் ஆகியோர் நிவா ரண பொருட்களை வழங்கினர். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பா ளரும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டளருமான தேவராஜ், கல்லூரி அலுவலர் நாராயணன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் கள் உடனிருந்தனர்.