தூத்துக்குடி, மே 25- உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அகழாய்வு பணிகள் துவங்க உள்ளதாகவும், இந்த பணியை அமைச்சர் மா.பாண்டியராஜன் துவக்கி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த பணிகள் தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலை யில், செவ்வாய்க்கிழமை அகழாய்வு பணி கள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அகழாய்வு பணியினை தொல்லியல் துணை இயக்குநர் சிவா னந்தம் துவக்கி வைக்கிறார். ஆதிச்சநல்லூ ரில் 6 ஆம் கட்ட அகழாய்வு துவங்க உள்ளது. இதற்கு முன்னர் 1876, 1902, 1905, 2004, 2005 ஆகிய வருடங்களில் அகழாய்வு பணி கள் நடந்தன.
இந்த பணிகள் அனைத்தும் வெளிநாட்டினர் மற்றும் மத்தியல் தொல்லி யல் துறை சார்பாக நடந்தது. முதல் முறை யாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணி துவங்க உள்ளது. சிவகளையில் முதல் முறையாக இந்த பகுதியில் அகழாய்வு பணி துவங்க உள்ளது. எனவே சிவகளை அகழாய்வு பணி பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழி கள், மண்பாண்டங்கள், இரும்பு பொருட்கள் என 50-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் தலைமை யில் நடைபெறுகிறது. சிவகளையில் தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் இந்த அகழாய்வு பணி துவங்க உள்ளது.