தூத்துக்குடியில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க வாய்ப்புள்ளது
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக
இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளது.