தூத்துக்குடி, ஆக.3- தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலம்மாள் (77). இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தனி யார் நிதி நிறுவனத்தில் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதலீடு செய்த பணத்து டன் வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனத்திடம் பலமுறைக் கேட்டும் கொடுக்க மறுத்து வருகிறது. தற்போது நான் சாப்பிடுவதற்குக் கூட வழியில்லா மல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதனால் மாவட்ட ஆட்சியர் எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.