tamilnadu

எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

தூத்துக்குடி, ஏப்.19 - தூத்துக்குடியில் வியாழனன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய நிலையில் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் (இவிஎம்) பழுதானதால் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி டி சவேரியார்புரம் வாக்குச்சாவடியில் இவிஎம் இயங்காததால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. புதிய இயந்திரம் பொருத்திய பின்னர் வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கியது. இதுபோல், திரேஸ்புரம், லயன்ஸ் டவுண், காராப்பேட்டை பள்ளி வாக்குச்சாவடி, டூவிபுரம் 5-வது தெருவில் உள்ள வாக்குச்சாவடி, புதுக்கோட்டை பெரியநாயகம் பள்ளி வாக்குச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இவிஎம் பழுது காரணமாக வாக்குப் பதிவு தாமதமாகத் தொடங்கியது. மேலும் பல இடங்களில் மை அழிவதாக புகார் வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

;