tamilnadu

நாசரேத் அருகே வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி போலீசார், சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை

தூத்துக்குடி, ஜூன் 6 நாசரேத் அருகே  வாலிப ருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதைய டுத்து அவர் சென்று வந்த  இடங்களில் எல்லாம் போலீ சார், சுகாதாரத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள  இடையன்விளை கட்டைய னூரைச் சேர்ந்தவர் சக்தி வேல் மனைவி   சூரியகனி (65). இவர் கணவர் இறந்து போனதால் அவரது மகள்வழி பேரன் ஜெயபால் மகன் தனபாலுடன் (18)  இருந்து வருகிறார். தனபால் கூலித் தொழிலுக்கு சென்று வந்தார். இதற்கிடையே சூரியகனி கடந்த வாரம் மாவடிபண்ணையில் உள்ள அவரது உறவினர்  இறந்த வீட்டிற்கு சென்று வந்தார். அவர் அங்கு சென்ற வந்த பின் உடல் நலம் குன்றி கடந்த 2ஆம்தேதி நாசரேத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .  அங்கு இறந்து போனதாக தெரிவித்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை.  

மாவடிபண்ணையில்  இறுதி நிகழ்ச்சிக்கு வந்த வர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி காண ப்பட்டு தூத்துக்குடியில் சிகி ச்சை மேற்கொண்டு வரு கின்றனர். இதனால் சுகாதா ரத்துறையினர் சந்தேகம் கொண்டு சூரியகனி பேரன் தனபாலை பரிசோதனை நடத்தினர். அதில் அவருக்கு வெள்ளியன்று  கொ ரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் அவரை தூத்துக்குடி அரசு  மருத்துவமனைக்கு கொரோ னா சிகிச்சைக்கு  அனுப்பி  வைத்தனர்.  இந்நிலையில் நாசரேத் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையில் உதவி  ஆய்வாளர்கள் தங்கேஸ் வரன், சூரியன் மற்றும் சுகா தாரத்துறையினர் சூரியகனி  சென்ற தனியார் மருத்துவ மனை, தனபால் சென்ற பகு திகள் மற்றும் அவரது உறவி னர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

;