tamilnadu

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்

தூத்துக்குடி,அக்.23- அனைத்திந்திய பிஎஸ்என்எல் டிஒடி  ஒய்வூதியர்  சங்கத்தின் தூத் துக்குடி மாவட்ட கிளை சார்பில் தூத்துக்குடி  பி சி  வேலாயுதம் அரங்கில்11வது அமைப்புதின சிறப்பு கருத்தரங்கம் 21ஆம்தேதி அன்று மாவட்டத் தலைவர் டி. சுப்பிரமணியன் தலைமையில்   நடைபெற்றது. முன்னதாக தூத்துக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு சங்கக் கொடியினை  அனைத்திந்திய பிஎஸ்என்எல் டிஒடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் சி.கே.நரசிம்மன்   ஏற்றி வைத்தார்.  பின்னர் நடைபெற்ற கருத்த ரங்கின் முதல் நிகழ்வாக அஞ்சலி மற்றும் வரவேற்புரையை மாவட்டச் செயலாளர் பி.ராமர் நிகழ்த்தினார். கருத்தரங்கை துவக்கிவைத்து மாநிலத் தலைவர் சி.கே. நரசிம்மன் உரையாற்றி னார். மாநில துணைச் செயலாளர் எம்.செல்வராஜ் “இந்திய அரசிய லும் சமூக கடமைகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அகில இந்திய துணைத் தலைவர் எஸ் மோகன்தாஸ் “நவீனமய மும் ஓய்வூதியர் பிரச்சனைகளும் “ என்ற தலைப்பில் உரையாற்றி னார்.  பிஎஸ்என்எல்யு  மாநில உத விச்செயலாளர் ஆர்.எம்.கிறிஸ் டோபர் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டப் பொருளாளர்  கே.கணே சன் நன்றி உரையாற்றினார். 

;