tamilnadu

img

புதிய காவல் ஆய்வாளர் நியமனம்

தூத்துக்குடி, ஜூன் 27- சாத்தான்குளம் காவல்துறையின ரால் தாக்கப்பட்டு வியாபாரிகளான தந்தை, மகன் உயிரி ழந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மாற்றப்பட்டார். இதனையடுத்து புதிய ஆய்வாளராக பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு,கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தனர். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் கண் டித்துள்ளன. இதையடுத்து சாத்தான் குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப் பட்டார். இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.