தூத்துக்குடி, ஜூன் 22- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. ஞாயிறன்று மட்டும் 50 பேர் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து வருவோர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போர் என தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று மிக வேக மாகப் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டுமே 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி ஒரே நாளில் 50 பேரு க்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொட ர்ந்து 18-ஆம் தேதி 27 பேருக்கும், 19-ஆம் தேதி 28 பேருக்கும், 20-ஆம் தேதி 46 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கொரோனா தொற்றால் பாதிக்க ப்பட்டோர் எண்ணிக்கை 575 ஆக இருந்தது.
இந்நிலையில் மாவட்டத்தில் ஞாயிறன்று 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் 2 பேர் மட்டுமே பட்டியலில் சேர்க்க ப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக உள்நோ யாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதனால் பாதி க்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி நகரில் டூவிபுரம், அண்ணா நகர், மில்லர்புரம், ராஜபாண்டிநகர், பூபால ராயர்புரம் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா தொற்று உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணி க்கை 444 ஆக அதிகரித்துள்ளது. திங்களன்று காலை 7 மணி நிலவரப்படி 209 பேர் உள்நோயா ளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.