தூத்துக்குடி, ஜூன் 1- தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள பனிக்கநாடார் குடியிருப்பு, யோகரத்தினம் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் தூசிமுத்து (18). கோவையில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். வேல்முருகனின் தங்கை ராஜேஸ்வரி என்பவரின் மகன் அஜித்குமார் (24), பெங்களூரில் கூலி வேலை செய்து வந்தார். உறவினர்க ளான தூசிமுத்துவும், அஜித்குமாரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் இருப்ப தால் வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஒன்றாக பைக்கில் சுற்றித் திரிந்துள்ளனர். இதனால் வேல்முருகன் அவர்களை கண்டித்தாராம். இதில் மனவேதனை யடைந்த இருவரும் குரும்பூர் ரயில் நிலையம் அருகே, மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து குரும்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் அவர்களது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.