திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூரில் புதிதாக இந்தாண்டு சட்டமன்றஉறுப்பினர் சந்திரபிரபா முயற்சியால் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இளங்கலை மாணவர்களுக்கான சேர்க்கைவிண்ணப்பங்கள் வழங்கும்நிகழ்வு திங்களன்று நடைபெற் றது.
விண்ணப்பங்களை பால்வளத்துறை அமைச்சர் இராஜேந் திர பாலாஜி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வேளாண் திருத்தமசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார்என்றார். மும்மொழிக் கொள்கையில் பாஜக, அதிமுக இடையே முரண்பாடு உள்ளதா என்ற கேள் விக்கு பதிலளித்த அமைச்சர் இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தில் நிலைப்பாடு. கூட்டணிவேறு; கொள்கை வேறு. கூட்டணியை விட்டு கொடுக்கலாம்; கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது. கூட்டணி என்பது துண்டு போன்றது, கொள்கை என்பது வேஷ்டி போன்றது.
முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, “அதிமுககடல் போல் பெரிய ஆளுமையான கட்சி. கடலில் கொந்தளிப்பு
வரும். ஆனால் கடல் அப்படியேதான் இருக்கும். சில நேரங்களில்கடல் பொங்கும். ஆனால் மங் காது. அதிமுக ஒரு பொங்கும் கடல் என்றார்.