tamilnadu

img

சிபிஎம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

திருவில்லிபுத்தூர்
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின்  திருவில்லிபுத்தூர் ஒன்றியம்  சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளருமான கே.சாமுவேல் ராஜ் கலந்துகொண்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் .இதில்   கட்சியின் மாவட்ட செயலாளர் கே. அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் சி.ஜோதிலட்சுமி ,ஒன்றிய செயலாளர் எஸ்.வி.சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

;