tamilnadu

img

பெண்கள் தின கருத்தரங்கம்

குடவாசல்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அரசவனங்காடு ஊராட்சியில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. அரசவனங்காடு ஊராட்சி தலைவர் எல்.சுலக்சனா, துணை தலைவர் எம்.இந்திராணி ஆகியோர் தலைமை வகித்தனர். அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.கோமதி முன்னிலை வகித்தார். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் என்.அமிர்தம், ஜி.கலைச்செல்வி ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். சிஐடியு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.மாலதி, மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி சட்டங்களைப் பற்றி விளக்கி பேசப்பட்டது.