மன்னார்குடி, ஆக.25- விதொச மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா- செங்கொடி இல்லத் திருமண விழா, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் கோட்டூரில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.கணேசன், எஸ்.தங்கராசு முன்னிலை வகித்தனர். விதொச மாநிலச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்டத் தலைவர் எம்.கலைமணி, வி.ச மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள். விச மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், சிஐடியு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, சிபிஎம் அலுவலக செயலாளர் எம்.சேகர், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், சிபிஐ ஒன்றிய செயலாளர் கே.மாரிமுத்து, சிபிஎம் இடைக்கமிட்டி செயலாளர்கள் எஸ்.ஆறுமுகம், எல்.சண்முகவேலு, விசிக செயலாளர் ஆரா.சு.பிரகாஷ், அமமுக நிர்வாகி பி.சேகர், திமுக எஸ்.முருகானந்தம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோமதி உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இயக்கங்களின் பொறுப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவாக ஆர்.குமாரராஜா நன்றி கூறினார்.