tamilnadu

img

வேயண்ணா நினைவு தின நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, அக்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருத்துறைப்பூண்டி வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் நகரக் குழு வின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வேயண்ணா என்று அழைக்கப்படும் எம்.வேதை யன் ஒன்பதாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் கே.ஜி.இரகுராமன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வி.டி.கதிரேசன், டி.வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தனர். வேதை சாலை எம்.பி.கே நினைவிடத்திலிருந்து மலர் வளையம் எடுத்துக் கொண்டு ஊர்வல மாக சென்று வேயண்ணா நினை விடத்தில்  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.என்.முருகானந்தம், சி.ஜோதி பாசு, மாவட்ட குழு உறுப்பினர் எஸ். சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் டி.எஸ்.மணியன், வி.ரவி, பி.என். தங்கராசு, பி.ராமச்சந்திரன், எம். முருகதாஸ், நகர குழு கே.வேதரத்தி னம், எஸ்.தண்டபாணி, கே.கோபு, எம். ஜெயபிரகாஷ் முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.