tamilnadu

img

திருவாரூர்: லஞ்சம் கேட்ட சார் பதிவாளர் உள்பட 2 பேர் கைது  

திருவாரூரில் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் பெற்றதாக சார் பதிவாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வினோதினி என்பவர் தன் சகோதரியின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் தினேஷ் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் கென்னடியுடன் இணைந்து ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக வினோதினி திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

அதனைதொடர்ந்து போலீசார் அறிவுரைப்படி ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை வினோதினி சார் பதிவாளர் தினேஷ் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் கென்னடியிடம் கொடுத்தார். இதை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;