tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி, ஜன.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி  திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது. நகர செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார்.  கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.சாமிநாதன், எம்.பி.கே.பாண்டியன், நகரக்குழு உறுப்பினர்கள் ஆர்.எம்.சுப்பிரமணியன், கே.கோபு, ஒன்றிய குழு உறுப்பினர் பி.என்.தங்கராசு, தமுஎகச மாவட்ட பொருளாளர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;