மாணவர் சங்க நிர்வாகி மீது எஸ்.ஐ தாக்குதல் நடவடிக்கை கோரி சிபிஎம் மனு
திருவாரூர், அக்.24- இந்திய மாணவர் சங்கத்தின் திரு வாரூர் மாவட்ட முன்னணி நிர்வாகி யாக செயல்பட்டு வருபவரும், திரு வாரூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட அழகிரி நகரில் வசித்து வருபவரு மான கல்லூரி மாணவர் வீரமணி.சந்தோஷ் நகர உதவி காவல் ஆய்வா ளர் பாரதநேரு என்கின்ற நேருவால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அது பற்றி நியாயம் கேட்ட பட்டி யல் இனத்தைச் சேர்ந்த அவரது தாய் மகாலெட்சுமியை சாதியைக் கூறி பொது வெளியில் திட்டி அவ மானப்படுத்தியுள்ளார். இவரது இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சாதி வன்மத்துடன் தாக்குதல் நடத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
சாதியைச் சொல்லி திட்டி மிரட்டல்
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி யில் பயின்று வரும் வீரமணி சந்தோஷ் (18). கடந்த 13 ஆம் தேதி யன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை நலம் விசா ரித்து விட்டு தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பழைய பேருந்து நிலை யம் அருகில் இரவு 9.30 மணியள வில் ஓடம்போக்கி ஆற்றிற்கு அருகா மையில் வந்த போது அவ்வழியாக வந்த காவல் உதவி ஆய்வாளர் பாரதநேரு விசாரணை என்ற பெயரில் இவர்களிடம் கடுமையாக நடந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருடன் வந்த காவலர்களும், சந்தோஷை தாக்கவே அச்சத்தில் வலிப்பு நோய் வந்து கீழே சரிந்துள்ளார். இத்தக வல் கிடைத்தவுடன் சம்பவ இடத் திற்கு அருகே அழகிரி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து தாய் மகாலெட்சுமி, தந்தை வீரமணி ஆகியோர் ஓடி வந்துள்ளனர். மகன் தரையில் மூச்சற்று கிடப்பதை பார்த்து உதவி ஆய்வாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்களை சாதியைச் சொல்லி திட்டியதுடன் கடுமையான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திகைத்தனர். இந்நிலையில் நிலைமையின் விபரீதம் அறிந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர், மாணவர் சந் தோஷை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்க முற்பட்டார். இதனைத் தடுத்து மாண வரின் பெற்றோர் அரசு மருத்துவ மனையில் அன்று இரவு 10.15 மணி யளவில் சிகிச்சைக்காக அனு மதித்தனர்.
வாக்குமூலத்தை மாற்றி பதிவு செய்து மிரட்டல்
சிகிச்சை பெற்று வந்த மாணவரி டம் சம்பவத் தினத்திற்கு மறுநாள் மற்றும் ஒரு உதவி ஆய்வாளரான செல்வராஜ் வாக்குமூலம் வாங்க சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மாண வர் கொடுத்த வாக்குமூலத்தை எடுக்காமல் மிரட்டியதுடன் அவரது விருப்பத்திற்கு இணங்க வாக்கு மூலத்தை மாற்றி பதிவு செய்துள் ளார். இதனிடையே மாணவர் தாக் கப்பட்டதைக் கண்டித்து அவர் பயிலும் கல்லூரியின் மாணவ மாண விகள் கல்லூரியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மாணவரின் தாயார் மகாலெட்சுமி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுக்களை அளித்தார். இவற்றின் மீது எந்த நடவடிக்கை யும் இல்லாததால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாள ரையும் சந்தித்து புகார் மனுக்களை அளித்தார். இதுபற்றி அவர் தெரி விக்கையில், நகர காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு அத்துமீறி சட்டத்திற்கு புறம்பாக மனித உரி மைக்கு எதிராக சாதிய வன்மத்தோடு தாக்கியும் அவரது பெற்றோரை இழிவுபடுத்தியும், அவமதித்தும் உள்ளார். எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரும் தவறு இழைத்த உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், சாதி குறித்து பேசி இழிவு படுத்திய அவர் மீதும் அவருடன் தாக்குதலில் ஈடுபட்ட இரு காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உயர் அதி காரிகளுக்கு பரிந்துரை செய்யவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை உடனே வழங்குக! சிபிஎம் வலியுறுத்தல்
தஞ்சாவூர், அக்.24- தஞ்சை மாவட்டத்தில், நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சை மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது. வியாழக்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், “கிராமப்புற வேலை உறுதி திட்டம் 100 நாள் வேலை செய்த பணியா ளர்களுக்கு, செய்த வேலைக்கான 3 மாத சம்பள பாக்கியை தீபாவளி பண்டிகையை யொட்டி உடனடியாக வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டு களாக காவிரியில் நீர் வராததால் குறுவை சாகுபடி இல்லாமல் போனது. இதனால் மாவட்டத்தில் சுமார் நாலரை லட்சம் விவசாய தொழிலாளர்கள் வேலை யிழந்து உணவுக்கே சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை ஓரளவு பட்டினியில் இருந்து காப்பாற்றி வருவது நூறு நாள் வேலைத் திட்டமே ஆகும். ஆனால் தற்போது கடந்த 3 மாதங்களாக வேலை செய்த பணி யாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பள பாக்கியை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், வெ.ஜீவ குமார், கே.பக்கிரிசாமி, சின்னை.பாண்டியன், சி.ஜெயபால், எம்.மாலதி, பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், எஸ்.தமிழ்செல்வி, கே.அருளரசன் மற்றும் சாமி. நடராஜன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.