யூரியா உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை
குடவாசல், அக்.23- பல்வேறு இடர்பாடுகளை கடந்து விவசாயிகள் தற்போது வயல்களில் சம்பா சாகுபடி பணிகள் துவங்கி மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் நெல் பயிருக்கு தேவை யான தலைச் சத்தான யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் யூரியா உரம் விவசாயி களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கோரிக்கை விடுத்துள் ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஜி சுந்தரமூர்த்தி குடவாசலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஒரு சில நாட்களாக விவசாயிகளிடமிருந்து யூரியா கிடைப்பதில்லை மேலும் சில உரக் கடைகளில் யூரியா இல்லை என்று கூறி பிறகு விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.50 கூடு தல் விலையில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு வந் துள்ளது, இதனை அடுத்து குடவாசலில் உள்ள உரக்கடை களில் யூரியா இருப்பு பற்றி கள ஆய்வு செய்தபோது கடை களில் யூரியா தட்டுப்பாடு தெரிய வந்துள்ளது,ஆகவே யூரியா இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேட்டூர் அணையில் நீர் இன்றி கவலையில் இருந்த விவசாயிகள் இயற்கையாக பருவ மாற்றம் ஏற்பட்டு தென் மேற்கு பருவமழை கடுமையாக பெய்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் தண்ணீர் நிரம்பி வழிந்தது மேட்டூர் அணையில் நீர் நிரம்பியது பின்னர் தொடர்ந்து பருவ மழை வாயிலாக மழை பரவலாக பெய்ததால் விவசாயி களை மகிழ்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து மேட்டூரில் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றுப் பாசன மட்டும் நம்பி இருக்கும் விவசாயிகள் மற்றும் பம்புசெட்டு மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து தங்களிடம் மிச்சமிருந்த மிச்சம் சொச்சம் இருந்த நகைகளையும் அடகு வைத்து வயல்களை குத்தகைக்கு எடுத்தும் வயல்களில் விவசாய பணி துவங்கி தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் பயிருக்கு முக்கிய தேவையான தழைச்சத்து உரமான யூரியா விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மாவட்டம் முழுவதுமே பரவலாக எழுந்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக்கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று துறைவாரியாக உரிய நடவடிக்கை எடுத்து மாவட்டம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு இன்று கிடைக்க வழி செய்யவேண்டும் இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி போராடும் நிலை உருவாகும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
கரூர் பரணி பார்க் பள்ளியில் மாநில கேரம் போட்டிக்கு வீரர்கள் தேர்வு போட்டி
கரூர், அக்.23- வருகின்ற நவம்பர் 8,9,10 ஆகிய தேதிகளில் அரியலூர், மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 61 வது மாநில சப் ஜூனியர், கேடட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை பெற இருக்கிறது. ஆகவே கரூர் மாவட்டத்தின் கேரம் விளை யாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுப்போட்டி வருகின்ற 2.11.19 (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கரூர் பரணி பார்க் பள்ளியில் தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் கரூர் மாவட்டத்தின் சார்பாக மாநில போட்டியில் விளையாட தேர்ந் தெடுக்கப்படுவார்கள். 14 வயது பிரிவு சப் ஜூனியர் (U-14) 11.11.2005க்குப் பிறகும், 12 வயது கேடட் பிரிவு (U-12) 11.11.2007 க்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும். இப்போட்டி யில் கலந்து கொள்பவர்கள் பிறப்புச் சான்றிதழ் நகல் கட்டாயம் கொண்டுவர வேண்டும். இச்செய்தியினை கரூர் மாவட்ட கேரம் சங்க தலை வர் எஸ்.மோகனரெங்கன், மாநில கேரம் சங்க துணைத் தலை வர் முனைவர் ராமசுப்பிரமணியன், கரூர் மாவட்ட கேரம் சங்க செயலாளர் எம்.சுரேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கேரம் சங்க பொரு ளாளர் செந்தில்குமார் – 9750991014ஐ தொடர்பு கொண்டு வீரர்கள் வருகைப் பதிவினை 31.10.19 க்குள் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்
அறந்தாங்கி, அக்.23- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பொன்பேத்தி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராமதுரை மற்றும் டாக்டர் .ஜெகன், சுகாதார ஆய்வாளர் பி.வீரகுமார் ஆகியோர் முன்னிலையில் 1200 மாணவர்கள் 70 பணியாளர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது பள்ளி தாளாளர் ராபர்தனராஜ் மற்றும் பள்ளி முதல்வர் சகோதரி எவ ராஸ்ட்மேரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.