tamilnadu

திருவாரூர்,கரூர்,மயிலாடுதுறை,புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன்வளர் போட்டிகள்
திருவாரூர், ஜூலை 24- திருவாரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 11,12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 7.8.2019-ம் நாளன்றும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 9.8.2019-ம் நாளன்றும் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் திருவாரூர், திரு.வி.க. அரசுக் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நடைபெற உள்ளன. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 11,12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி களிலிருந்து ஒரு மாணவர் வீதம் அனுப்பப்பட வேண்டும். போட்டிகளுக்கான தலைப்புகள் பங்கேற்கும் மாணவர் களுக்கு போட்டி நடைபெறும் நேரத்தில் தெரிவிக்கப்படும்.  போட்டிகளுக்கான தலைப்புகள் பெரும்பாலும் தமிழ்மொழி, தமிழ்இலக்கியம் குறித்த வகையில் அமையும். இதற்கு முன்பு இப்போட்டிகளில் பங்கேற்ற ஒரு மாணவர் தொடர்ந்து ஒரே போட்டியில் பங்கு பெற்று இரண்டு முறை பரிசுகள் பெற்றிருப்பின் மீண்டும் அதே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். போட்டி முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே தெரி விக்கப்படும். போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முறையே முதற்பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000ம், மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனு மதிக்கப்படுவர். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தாங்கள் பயி லும் பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் தாங்கள் பயிலும் கல்லூரிகளின் முதல்வர் அனுமதிக் கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவ ரம் அறிய விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 3-ம் தளத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலு வலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சேரன் கல்வி குழுமம் சார்பில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பேரணி
கரூர், ஜூலை 24- சேரன் கல்வி குழுமத்தின் சார்பில் புத்தக வாசிப்பின் அவசி யத்தை விளக்கி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-வரை நடைபெறவுள்ள இந்த புத்தக திரு விழாவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகால யம், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்துகிறது.  பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் படிப்ப தின் நோக்கத்தையும், அவசியத்தையும் விளக்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் சேரன் கல்வி குழுமத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி கரூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கி புத்தக கண்காட்சி நடை பெறும் மண்டபத்தில் நிறைவடைந்தது. விழா குழுவின் கவுரவத் தலைவர் ப.தங்கராசு பேரணியை துவக்கி வைத்தார். சேரன் கல்வி குழுமத்தின் தலைவர் பாண்டி யன் தலைமை வகித்தார். கண்காட்சி தலைவர் தீபம்சங்கர், செயலாளர் ஐ.ஜான்பாஷா, இணைச்செயலாளர் காமராஜ் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


ஏ.வி.சி. கல்லூரியில் புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கு
மயிலாடுதுறை, ஜூலை 24- மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமி ழாய்வுத் துறையின் திண்ணை அமைப்பின் சார்பாக புதிய கல்விக்கொள்கை – 2019 என்ற கருத்தரங்கம் மற்றும் மாண வர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தமிழாய்வுத்துறை பேராசிரியர் சு.ரமேஷ் தலைமை வகித்து புதிய கல்விக்கொள்கையின் நோக்கும் -போக்கும் குறித்து பேசினார். தமிழாய்வுத் துறைத்தலைவர் சு.தமிழ்வேலு, முன்னாள் பொருளாதார துறைத்தலைவர் முனைவர் எஸ்.இராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆங்கிலத்துறை இணைப் பேராசிரி யர் சி.சந்திரசேகர் கலந்து கொண்டார். பேராசிரியர் வி.நாக லெட்சுமி நெறியாளராகவும் தமிழாய்வுத்துறை மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து புதிய கல்விக்கொள்கையில் உள்ள நன்மை - தீமைகள் குறித்து கலந்துரையாடினர். இதில் பிறதுறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
பொன்னமராவதி, ஜூலை 24- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் ஜல சக்தி அபியான் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களின் மழைநீர் சேக ரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பொன் புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி பொன்னமரா வதி அண்ணா சாலை, பேருந்து நிலையம் வழியாக மேல்நிலைப் பள்ளி யை வந்தடைந்தது. இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழை நீர் சேகரிப்பு அவசியம் மற்றும் வீடுகளில் மழை நீர் தொட்டி அமைப்பு ஏற்படுத்துதல் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.