மன்னார்குடி, பிப்.5- மதச்சார்பற்ற ஜனநாயக முற் போக்கு கூட்டணியின் சார்பில் மன்னார் குடி பெரியார் சிலைக்கு எதிரில் குடி யுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் செவ்வாயன்று மாலை நடைபெற்றது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். திமுக நகரச் செயலாளர் வீரா கணேசன், காங்கிரஸ் நகரத் தலைவர் கனகவேல், சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.ஆறு முகம், மூத்த தலைவர் கே.டி.கந்த சாமி, சிபிஐ நகரச் செயலாளர் வி.கலைச் செல்வன், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பா.பாலச்சந்திரன், நகரச் செயலாளர் சன்சரவணன், மாவட்ட பிரதி நிதி மீனாட்சி சுந்தரம் மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.