மன்னார்குடி, ஜுலை 30- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்து வமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயா ளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை மெயின் ரோடு அருகாமையில் உள்ளதாலும், போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது விபத்துகள் நேருகிறது. மருத்துவமனை வாயிலின் இருபக்கமும் மெயின் ரோட்டில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினால் விபத்துகளை தவிர்க்க லாம். எனவே மன்னார்குடி நகராட்சி மற்றும் நெடுஞ்சா லைத் துறை நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி யில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோருகின்றனர்.