tamilnadu

மாணவர்களுக்கான திருக்குறள் பரிசு திட்டம்

திருவாரூர், ஆக.4- உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்து களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து  கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக  விளங்கும் வகையில் தமிழக அரசால் “திருக்குறள் முற்றோ தல் பாராட்டுப் பரிசுத்திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வரு கிறது. 2020-2021ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பி க்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரி வித்தால் அதற்கான அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப் பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திரு க்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கரு தப்படும்.     திருவாரூர் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம்  செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ-மாணவியர் இரு ப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போ ட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப்போட்டியில் கலந்து  கொள்ளக்கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் தளத்தில் அமை ந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்திலோ www.tamilvalarchiturai.com இலவ சமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும்  விவரங்களுக்கு 04366-224600 என்ற தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரி வித்துள்ளார்.

;