குடவாசல், ஜூன் 24- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் ரயில் நிலைய குட்ஷெட் தொழிலாளர் சார்பாக சிஐடியு சங்கச் செயலாளர் மனோகரன், தலைவர் கண்ணன் ஆகியோர் தலை மையில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தியிடம், கடந்த ஒரு மாதமாக ரயில்வே வேகன்களில் வரும் நெல்- அரிசி முட்டைகள் ஏற்றி இறக்கும் பணி முடக்கப் பட்டதால் குட்செட் தொழிலா ளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுவதாக முறை யிட்டனர். இதையொட்டி கட்சி மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி கூறும்போது, பேரளம் ரயில் நிலை யத்தில் குட்செட் தொழிலை நம்பி 200 க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர் கள் மற்றும் லாரி உரிமையா ளர்கள் 100 பேர், அதே போல் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட தொழிலாளர்கள் 200 நபர் பேரளம் ரயில் நிலையத்தில் உள்ள குட்செட் பணியை நம்பி உள்ளனர். லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 500 தொழிலா ளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பேரளம் ரயில் நிலையத்தை புறக்கணித்து திருவாரூர், நீடாமங்கலம் ரயில் நிலையங்களில் நெல் அரிசி மூட்டைகளை இறக்கும் நடவடிக்கை உள்ளது. ஆகவே பழைய நடை முறையில் பேரளம் ரயில் நிலையத்தில் உள்ள குட் செட்டில் நெல்- அரிசி இறக்கி வைக்க பணி துவங்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழ் நாடு நுகர்வோர் வாணிப கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் மிகப் பெரிய போராட் டம் மார்க்சிஸ்ட் கட்சி தலை மையில் நடைபெறும் என்றார். நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டி யன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.