tamilnadu

உள்ளாட்சித் துறை ஊழியர்களின் போராட்டத்தால் ஊதியம் உயர்வு

திருவாரூர், மார்ச் 18- ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சிஐடியு தலைமையில் திங்கட்கிழமை யன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். அன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற துறை சார்ந்த மான்ய கோரிக்கை விவா தத்தின் போது குடிநீர் தொட்டி இயக்கு பவர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக் கப்பட்டது. இது சிஐடியு போராட்டத்தி ற்கு கிடைத்த வெற்றி என்பதுடன் அரசின் இந்த அறிவிப்பிற்கு சங்கத்தின் சார்பாக பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் அளித்துள்ள அறிக்கையில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலைத் தொட்டி இயக்குனர்கள், துப்புரவுப்பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணிக் கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) தொடர்ச்சியாக போராடி வருகிறது.  பிப்.16 ஆம் தேதி தமிழ்நாடு சட்ட மன்றத்தில் உள்ளாட்சி மானியக் கோரிக்கை நடைபெற்றதையொட்டி தமிழக அரசின்  கவன ஈர்ப்புக்காக மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்ட பெருந்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒன்றுபட்டு போராடிய ஊழியர்கள் போராட்டத்தின் விளைவாக தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சி மானியக் கோரிக்கை அறிவிப்பாக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு வழங் கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. இரண்டாயிரத்து 600-லிருந்து நான்கா யிரமாகவும், தூய்மைக் காவலர்களு க்கு அதே போன்று மூவாயிரத்து 600 ஆக வும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயர்வினை அறி வித்துள்ள தமிழக அரசிற்கு உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு ஊழியர்களின் இதர நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.