tamilnadu

img

நகராட்சி கடை வாடகை பன்மடங்கு உயர்வு குறைக்கக் கோரி கடையடைப்பு

மன்னார்குடி, ஜன.28- ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள நகராட்சிக்கு ஆணையர் பணியிடத்தை நிரப்பிட வேண்டும். முன்னறிவிப்பின்றி நகராட்சி கடைகளுக்கு பன்மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டும் முன்தேதியிட்டு வாட கையை நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையாக வசூல் செய்யும் கொள்கை முடிவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக ளுக்காக செவ்வாயன்று மன்னார் குடி நகரின் அனைத்து வர்த்தக நிறு வனங்களும் கடையடைப்பு செய்யப் பட்டன.  வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கை பேரணி மன்னார்குடி பெரியார் சிலையிலிருந்து புறப்பட்டு நகரின் கடை வீதிகளின் வழியாக வந்து மன்னார்குடி நகராட்சிக்கு முன்பாக வந்தடைந்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வர்த்தக சங்க தலைவர் கேஜேஆர் பாரதி ஜீவா தலைமை வகித்தார். வணிகர் நல சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலை வர் சு. ஞானசேகரன், மருந்து வணிகர் சங்கத்தின் முன்னாள் மாநில தலை வர் எஸ். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி வர்ததகர் சங்க செயலாளர் ஆர்.வி. ஆனந்த், உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்எம்டி.கருணாநிதி, நக ராட்சி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் ஊமத்துரை உள்ளிட் டோர் பேசினர். வர்த்தக சங்க பொரு ளாளர் பிரபாகரன் நன்றி கூறினார். 

;