tamilnadu

img

தோழர் பி.ஆர்.சாமியப்பன் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி

திருவாரூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாவட்டக்குழு உறுப்பினருமான தோழர் பி.ஆர்.சாமியப்பன் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம்தேதியன்று காலாமானார். இந்நிலையில் அவரது உருவப்படத் திறப்புநிகழ்வு வியாழக்கிழமை புதுப்பத்தூரில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையேற்றார். ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் முன்னிலை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து உருவப்படத்தினை திறந்து வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், நாகை மாவட்டச் செயலாளர் நாகை.மாலி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.மாவட்ட, ஒன்றிய, நகர கட்சியினர்,வர்க்க வெகுஜன அரங்க தலைவர்கள்,உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். தோழர் பி.ஆர்.சாமியப்பன் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக கட்சியின் மாவட்டக்குழு சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப் பட்டது. அவரது துணைவியார் எஸ்.பூபதி பெற்றுக் கொண்டார்.

;