tamilnadu

மன்னார்குடி கோயில் விழா மின் பொறியாளர்கள் ஆய்வு

மன்னார்குடி, மார்ச் 15- மன்னார்குடியில் பங்குனி மாதம் நடை பெறும் ராஜகோபாலசுவாமி பங்குனி விழாவையொட்டி தடையில்லா மின்சா ரம் வழங்கிடும் வகையில் மின்வாரிய பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.  மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி விழா ஒரு மாத காலம் நடைபெறுவதையொட்டி தங்கு தடை யின்றி   சீராகவும், பாதுகாப்பாகவும் மின் விநியோகம் செய்வது தொடர்பாக மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து நகர உதவி செயற்பொறியாளர் சா. சம்பத் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தேரோட்டம் நடைபெறும் பகுதிகள், சுவாமி உத்சவம் செல்லும் வழிகளில் மின்பாதை, மின் மாற்றிகள் ஆய்வு செய்யப்பட்டன.  மின்தடை ஏற்பட்டால் விரைந்து சரி செய்யும் வகையில் நகர இளநிலை பொறி யாளர் கா.கண்ணன் தலைமையில் ஆக்க முகவர்கள், கம்பியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.  ஆய்வின் போது இளநிலை பொறியாளருடன் ஆக்க முக வர்கள் பாலசுப்புரமணியன், அம்பிகா பதி, கம்பியாளர் நாகராஜ் மற்றும் பணியா ளர்கள் உடனிருந்தனர்.