மன்னார்குடி, ஜூலை 11- இந்தியன் வங்கியின் கும்ப கோணம் மண்டலம் 96 கிளைகளுடன் 10,500 கோடி ரூபாய் மொத்த வணிக த்துடன் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட அலகாபாத் வங்கியில் 1993 ஆம் ஆண்டு விவசாய அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜி.ராஜேஷ்வர ரெட்டி மத்திய பிரதேசம், மகா ராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் சத்திஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்த அலகாபாத் வங்கியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்துள்ளார். பூனே, மும்பை, பெங்களூரு மற்றும் ரெய்ப்பூர் போன்ற பெரு நகரங்களில் வங்கியின் மண்டல மேலாளராக பணி யாற்றி விவசாயம், முன்னுரிமை கடன், சிறு வணிகம் மற்றும் தொழிற்கடன்கள் பிரிவுகளில் நல்ல அனுபவம் கொண்டவர் என வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.