tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு இறுதிக் கட்ட வாக்குச் சேகரிப்பு

குடவாசல், டிச.28- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் களத்தில் உள்ள அனைத்து சிபிஎம் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் ஈடுபட்டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள், மாவட்ட கவுன்சிலர் பொறுப்புக்கு ஜெ.முகமது உதுமான், ஒன்றிய கவுன்சி லர் பொறுப்புக்கு தியாகு ரஜினிகாந் ஆகியோருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்தி ரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டியும், ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புகளுக்கு ஆர்.சுந்தரமூர்த்தி மாரி. செல்வராஜ் மற்றும் மார்க்சி ஸ்ட் கட்சி சார்பாக போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. சனிக்கிழமை கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  நிறைவாக கொல்லுமாங் கடி கடைவீதியில் இறு திக்கட்ட பிரச்சாரம் நிறைவு பெற்றது. பிரச்சார பய ணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டி யன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், ஸ்டாலின் ராஜா, ராமமூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சியினர் எழுச்சி யுடன் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அகிலாவுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத் தில் வாக்களிக்கக் கோரி கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர். மணிவேல், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.மகா ராஜன், மாவட்ட குழு உறுப்பி னர் எஸ்.மீனா, ‌ஜெயங் கொண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் சி.உத்திராபதி, ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம், தா.பழுர் ஒன்றிய செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் பலருக்கும் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். குருவேலப்பர் கோவில் கிராமத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

;