tamilnadu

img

ஊழலை அம்பலப்படுத்தியதால் பொய் வழக்கு ரத்து செய்யக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜூலை 30- திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சியில் பிரதமர் வீட்டு வசதி திட்டம் தனி நபர் கழிப்பறைத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தில் கோடிக் கணக்கில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊழலை வெளிக் கொணர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மதிமுக ஒன்றிய செயலாளருமான மாசிலாமணி மீது புனையப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய கோரி மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக மாவட்ட தலைவர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.

;