tamilnadu

img

கோரிக்கைகளை வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் மறியல்

திருவாரூர், மார்ச் 7- குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் இரா.மாலதி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.  மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட செயலாளர் டி.முருகையன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனிவேல், மாவட்ட பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன், துணைச் செயலாளர் எஸ்.வைத்தியநாதன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எம்.கே. என்.அனிபா, அங்கன்வாடி சங்க மாவட்ட செயலாளர் வி.தவமணி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பி.நடராஜன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் பி.என். லெனின், மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், சுமைப்பணி சங்க செயலாளர் கே.கஜேந்திரன், முறைசாரா சங்கத்தின் ராமச்சந்தி ரன் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.