குடவாசல் ஜூலை 25- குடவாசல் அரசு மருத்து வமனையில் அமைந்துள்ள சித்த மருத்துவமனைக்கு மின்சார அடுப்பு வழங்கி னார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி. திருவாரூர் மாவட்டம் குட வாசலில் அமைந்துள்ள சித்த மருத்துவமனைக்கு பல்வேறு நோய் சிகிச்சை க்காக நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த நிலையில் வெப்பச் சலனம் காரண மாக கடந்த 20 நாட்களாக குட வாசல் பகுதியில் விட்டு, விட்டு மழை தூறல் ஆகவும் சில சமயம் கனமழை ஆக வும் பெய்துள்ளது. இதையடுத்து சித்த மருத்துவமனையில் தின மும் நிலவேம்பு கசாயம் தயாரித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்து வரின் ஆலோசனையின் பெயரில் வழங்கப்படுகிறது. தினமும் நிலவேம்பு கஷா யம் தயாரிக்க சித்த மருத்து வமனைக்கு என்று தனியாக மின்சார அடுப்பு இல்லாமல் பொது மருத்துவமனை உள்ள அடுப்பை தினமும் இரவல் பெற்று நிலவேம்பு கசாயம் தயாரித்து பொது மக்களுக்கு வழங்குவதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி சித்த மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு பயன்படும் விதம் நில வேம்பு கசாயம் தயாரிக்க மின்சார அடுப்பு ஒன்று சித்த மருத்துவர் சங்கீதாவிடம் கொடுத்தார். மின்சார அடுப்பை பெற்றுக் கொண்ட மருத்து வர் சங்கீதா மற்றும் மருந்தா ளுநர் ஜானகி ஆகி யோர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்திக்கு நன்றி கூறினர்.