tamilnadu

img

காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, செப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகரக்குழு சார்பில் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஸ்டாலினை கைது செய்ததை கண் டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரக் குழு செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமாரராஜா கண்டன உரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், வி.ச. நகரச் செயலாளர் எம்.ஜெயபிரகாஷ், வி.தொ.ச நகரச் செயலாளர் எஸ்.தண்ட பாணி, நகரக்குழு உறுப்பினர் ஏ,கே. செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகரச் செயலாளர் மா.சண்முகம், தலை வர் ராமசாமி, வழக்கறிஞர் வி.வி.செந் தில்குமார், திராவிடமணி, கார்த்தி, தமிழ்மணி, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;