tamilnadu

img

திருவாரூரில் 16 மாணவிகளுக்கு கொரோனா உறுதி - 7 நாட்களுக்கு பள்ளி விடுமுறை

திருவாரூர், மார்ச் 10 -
மன்னார்குடி அரசு பள்ளியில் 16 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானதால் அப்பள்ளிக்கு 7 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு தினங்களுக்கு முன்னர், 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர்கள் அனைவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அப்பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், மேலும் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
இதனால், அப்பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

;