மன்னார்குடி, டிச.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயக புரட்சி கோட்பாடு களை செதுக்கிய நவரத்தின சிற்பி களில் ஒருவரும் கட்சியின் முதல் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் களில் ஒருவரும், மிகச் சிறந்த நாடாளு மன்ற வாதங்களை முன் வைத்த இந்திய உழைப்பாளி மக்களின் மகத்தான தலைவர்களில் ஒருவருமான அன்புத் தோழர் பி.ராமமூர்த்தியின் 32-வது நினைவு தினம் மன்னார்குடியில் ஏழு இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. துவக்க நிகழ்ச்சியாக நகரக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு நகர செயலாளர் எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்ட தலைவர் இரா. தாமோதரன் அறிமுக உரையாற்றினார். திருவாரூர் மாவட் டத்தின் மூத்த கட்சித் தலைவர்களின் ஒருவரும், மன்னார்குடி ஒன்றியக்குழு உறுப்பினருமான தோழர் கே.டி. கந்தசாமி, தோழர் பி.ஆர்-வுடன் நேரடி யாக பழகிய இயக்க அனுபவங்களை நினைவு கூர்ந்து முடிவுரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கே.அகோ ரம் நன்றி கூறினார். துவக்கத்தில் தோழர் பி.ஆர் உருவப் படத்திற்கு எஸ்.ஆறு முகம் மாலை அணிவிக்கவும், அனை வரும் மலர் தூவி உறுதியேற்றனர். ஆட்டோ தொழிலாளர் சங்கம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் களின் மன்னார்குடி நகரக்கிளையின் சார்பாக ஆட்டோக்களில் ஊர்வல மாக சென்று ஐந்து இடங்களில் கொடி கள் ஏற்றி வைக்கப்பட்டன. மன்னார்குடி தொடர் வண்டி நிலையத்தில் அ.மதியழ கன் தலைமையில் க.பிரகாஷ் சிஐடியு கொடியை ஏற்றி வைத்தார். ஐவர் சமாது நிறுத்தத்தில் ப.ராஜேஷ் தலைமையில் அ.மதியழகன் கொடியேற்றினார். பந்தலடியில் க. கணேசன் தலை மையில் பொன். ஆறுமுகம் கொடி யேற்றினார். இந்தியன் வங்கிக் கிளை யில் பொன். ஆறுமுகம் தலைமையில் நகர செயலாளர் அ. அரிகரன் கொடி யேற்றினார். வஉசி சாலையில் ஜெய ஆனந்த் தலைமையில் அ. அசாருதீன் கொடியேற்றி வைத்தார். ஐந்து இடங்களிலும் சிஐடியு நகர பொறுப்பா ளர் க.அகோரம் கலந்து கொண்டு உரை யாற்றினார்.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள்
மன்னார்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் சார் பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ். ஏகாம்பரம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. ரெகு பதி முன்னிலை வகித்தார். சிஐடியு கொடியை உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. முனியாண்டி ஏற்றி வைத்தார். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத் தின் துணைப் பொதுச் செயலாளர் ஏ. கோவிந்தராஜ், ஏஐடியுசி துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சந்திரசேகர் பேசினார்கள். நிகழ்ச்சியில் பணிமனை போக்குவரத்துத் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். கே. கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
திருச்சிராப்பள்ளி
தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் மற்றும் சிஐடியு அகில இந்திய மாநாட்டு கொடியேற்று விழா குட்செட் பகுதியில் ஞாயிறு அன்று நடை பெற்றது. விழாவிற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். சங்க கொடியை சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் ராமர் வாழ்த்துரை வழங்கி னார். முன்னதாக சுமைப்பணி தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக் குமார் வரவேற்றார். பொருளாளர் ரவிக் குமார் நன்றி கூறினார். விழாவில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் எம்.ரகமதுல்லா, எம். ரமேஷ் தலைமையில் 16 தொழிலா ளர்கள் அண்ணா தொழிற் சங்கத்திலி ருந்து விலகி சிஐடியு சங்கத்தில் இணை ந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆனந்தன், தன லட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மணப்பாறை
மணப்பாறையில் பஸ் ஸ்டாண்ட் அருகில் சிஐடியு சார்பில் தோழர் பி.ராம மூர்த்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ்.எம்.ஷாஜ கான் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.சிதம்பரம், சிபிஎம் வட்ட செயலாளர் என். ராஜகோபால், வட்டக்குழு உறுப்பி னர்கள் பி.பாலு, வி.சீனிவாசன், எம்.தங்கராஜ், முத்துச்சாமி, ஆர்.சுரேஷ், ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட தலை வர் நவமணி, நிர்வாகிகள் சந்தியாகு, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திரு வெள்ளறை ஒன்றியக்குழு சார்பில் திரு வெள்ளறை கடைவீதியில் அமைந் துள்ள பி.ஆர்.நினைவகத்தில் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் அனு சரிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆணைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சுப்ரமணியன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செய லாளர் முருகேசன், அரசு விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில செயற்குழு உறுப்பி னர் அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். சேகர், செல்வராஜ், செல் லையா, ஸ்ரீநாத், செந்தாமரை, ரெங்க நாதன், பெரியண்ணா உள்பட திரளா னோர் தோழர். பி.ராமமூர்த்தி உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.